வியாபாரியிடம் ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..

ஜோலார்பேட்டையில் வியாபாரி முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் 5 கிலோ நகையை கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர் ரகுராம் (44). நகை பட்டறை கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பேரில் இவர் கடைக்கு வரும் நகைகள் வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவரது கடையில் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து (30), அய்யனார் (23), ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். சென்னை வியாபாரி ஒருவர் ரகுராமிடம் 5 கிலோ நகை ஆர்டர் செயதிருந்தார்.

அந்த 5 கிலோ நகைகளை ஒரு பேக்கில் சிறிய அளவில் பூட்டு போட்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் மாரிமுத்துவும், அய்யனாரும் கொண்டு சென்றனர். ரெயில் இன்று அதிகாலையில் ஜோலார்பேட்டைக்கு வந்தது.

அவர்கள் இருந்த அந்த பெட்டியில் கேரள மாநிலத்தை சேர்ந்த அக்ராப் (30), சுராஜ் (26) ஆகியோர் ஏறினர். அவர்கள் இருவரும் நகை வைத்திருந்த பேக்கின் பூட்டை கட் செய்தனர். இதனைக் கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது கொள்ளையர்கள் மாரிமுத்து, அய்யனார் முகத்தில் ஸ்பிரே அடித்து ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். பயணிகள் அவர்களை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

202205041449511838 Tamil News Tamil news 5 kg jewelry robbery attempt 2 arrested in MEDVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Entertainment News

Popular Categories