சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் இன்று 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை கைதியாக விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று விசாரணையில் ஈடுபட்ட தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் இருவரும் தற்போது கைது செய்யப்படுள்ளனர்.
12 காவல்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் இருவர் கைது செய்ய ப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.





