மகாசிவராத்திரி விழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விழாவான இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மாலை நேர வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 29,135.88 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809,35 என்ற அளவில் இருந்தது.
மகாசிவராத்தி: மும்பை பங்குச் சந்தை விடுமுறை
Published:

