சங்கரராமன் கொலைவழக்கில் விடுதலையான தாதா அப்பு புற்றுநோயால் மரணம்

Published:

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலையில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான தாதா அப்பு ஆந்திராவில் வாழ்ந்துவந்தார். அங்கு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உட்பட சில வழக்குகளின் கீழ் அப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அப்புவுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் திங்கட்கிழமை நேற்று மாலை உயிரிழந்தார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img