அருப்புக்கோட்டை- மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர் கைது

                 
அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர்கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இரு தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்க்கு  போதை மாத்திரைகள் விற்பதற்காக முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.104 போதை மாத்திரைகள் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டன 

          அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கலிங்கபுரம் பேருந்து நிறுத்தமருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் மேலும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அருகருகே அமைந்துள்ளன.இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 6000ற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர்.இதனிடையே  செவ்வாய்க்கிழமை  அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் இப்பள்ளிகள்  உள்ள பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தாராம்.அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞர் ஒருவர் மதியம் உணவு இடைவேளைக்காக வெளியில் வரும் பள்ளி மாணவ,மாணவியரிடம் பேச முயல்வதும் பின்னர் விலகிவருவதுமாக இருந்தார்.இதனால் அந்த இளைஞரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அவரை ஆய்வு செய்தபோதுதான் சுமார் 104  போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தீபக்ராஜ்  என்பதும்,அங்கிருந்த பள்ளி மாணவ,மாணவியர்க்கு  அப்போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.எனவே இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர்காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு அந்த இளைஞரைக்கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
images 45 - 2026
ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories