அருப்புக்கோட்டை- மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர் கைது

                 
அருப்புக்கோட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்க முயன்ற இளைஞர்கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இரு தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்க்கு  போதை மாத்திரைகள் விற்பதற்காக முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.104 போதை மாத்திரைகள் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டன 

          அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கலிங்கபுரம் பேருந்து நிறுத்தமருகே தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் மேலும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் அருகருகே அமைந்துள்ளன.இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 6000ற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர்.இதனிடையே  செவ்வாய்க்கிழமை  அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் இப்பள்ளிகள்  உள்ள பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தாராம்.அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞர் ஒருவர் மதியம் உணவு இடைவேளைக்காக வெளியில் வரும் பள்ளி மாணவ,மாணவியரிடம் பேச முயல்வதும் பின்னர் விலகிவருவதுமாக இருந்தார்.இதனால் அந்த இளைஞரைப்பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அவரை ஆய்வு செய்தபோதுதான் சுமார் 104  போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தீபக்ராஜ்  என்பதும்,அங்கிருந்த பள்ளி மாணவ,மாணவியர்க்கு  அப்போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.எனவே இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர்காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு அந்த இளைஞரைக்கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
images 45 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories