உத்தரகாண்ட் மாநிலத்தில் 500பள்ளிகளின் நிலமை.. அதிகாரிகள் அதிர்ச்சி

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜமத்ரா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவது கடந்த மாதம் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையில் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் காலை செய்யும் இறைவழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக கைகளை கூப்பி வணங்கி இறைவழிபாடு செய்யும் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த முறையில் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவ-மாணவிகள் இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையான கைகளை மடக்கி தலையை குணிந்து காலை இறைவழிபாடு செய்யும் முறையை பின்பற்றி வந்துள்ளனர். இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்த மாற்றங்கள் மாநில அரசின் கவனத்திற்கு செல்லமாலேயே அரங்கேறியுள்ளது.

உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..

உள்ளூர் அரசியல்வாதிகள், இஸ்லாமிய மத போதகர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோரின் அழுத்தத்தால் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த மாற்றம் ஜமத்ரா மாவட்டத்தை போன்றே அம்மாநிலத்தின் ராம்ஹரா, ஹர்வா, டும்கா, டியொஹர், கட்டா, கிரிடிஹா, பலமும்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் உருது சேர்க்கப்பட்டுள்ளது. வார விடுமுறை ஞாயிறுக்கு பதில் இஸ்லாமிய மத மாணவ-மாணைவிகள் இறைவழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது மாநில அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு மாநில கல்வித்துறை கடந்த 2-ம் தேதி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. அதில், உரிய அனுமதியின்றி 407 பள்ளிகளில் அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 509 பள்ளிகளில் விடுமுறை நாள் ஞாயிறுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநில கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

இந்த ஆய்வை தொடர்ந்து அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்ட 407 பள்ளிகளில் 307 பள்ளிகளில் உருது மொழி நீக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து வந்த 509 பள்ளிகளில் 459 பள்ளிகளில் மீண்டும் விடுமுறை தினம் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. எஞ்சிய பள்ளிகளிலும் பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் உரிய அனுமதியின்றி விடுமுறை நாள் மாற்றம், காலை இறைவழிபாடு முறை மாற்றம், உருது மொழி சேர்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட இந்த செயலில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனாதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக ஹெமந்த் சோரன் முதல்-மந்தியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

school open265220m1 - 2026
ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories