அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு புதிய நீதிபதி நியமனம்..

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதும், இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமசாமிக்கு பதில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் திங்கட்கிழமை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையை தொடங்கி 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருப்பதால் விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் வருகிற 9, 15, 19, 31 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. திங்கட்கிழமை வழக்கு விசாரணை தொடங்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். இதனால் வழக்கு விசாரணை காரசாரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் பொதுக்குழு விவரங்களையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கோர்ட்டில் எடுத்துக்கூற உள்ளனர்.

இது செல்லாது என்று ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல்கள் வாதிட உள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று 10 நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதை தொடர்ந்து கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே ஓ.பி.எஸ். தற்போது முறையிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கை விசாரிக்க போகும் நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் எந்த மாதிரியான தீர்ப்பை வழங்க போகிறார்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
chennaihigh1a 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories