வங்கிக் கொள்ளை: காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து நகைகள் மீட்பு..

Published:

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கத்தை தனிப்படை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைகள் கொள்ளையில் அமல்ராஜூக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

தனிப்படையினா் கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ், அதே பகுதி மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி,செந்தில்குமரன் ஆகிய 3 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த முருகனின் நெருங்கிய கூட்டாளியான வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சூா்யா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். 

kamadenu 2022 08 ab56ecad a7c0 4460 ab9e 4b350a0af8af 9 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img