December 8, 2025, 1:48 PM
28.2 C
Chennai

பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன்..

Tamil News large 3103354 - 2025

பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலியான போலீஸ் அதிகாரி போலி ஐஏஎஸ் அதிகாரியை ,போலி சிபிஐ அதிகாரியை பார்த்திருக்கிறோம். ஆனால், போலி போலீஸ் ஸ்டேசன் பார்த்திருக்கிறீர்களா? அந்த குறையை போக்கி விட்டார்கள். பீஹார்காரர்கள். அங்கு, 8 மாதமாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீஹாரின் பங்கா மாவட்டத்தில், நகர போலீஸ் ஸ்டேசன் மற்றும் மாவட்ட எஸ்.பி., வீடு அமைந்துள்ள பகுதி அருகே விருந்தினர் இல்லம் ஒன்றில், கும்பல் ஒன்று போலியாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்துள்ளனர். இந்த கும்பல், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் அணியும் சீருடை போன்றே உடையணிந்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இதற்காகவே அந்த விருந்தினர் மாளிகையை, போலீஸ் ஸ்டேசன் உட்கட்டமைப்பை போலவே மாற்றி அமைத்துள்ளனர். அந்த கும்பலில் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் போலீஸ் சீருடையில் வந்தவர்களை, நகர போலீஸ் அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது. இதனையடுத்து 2 பெண் உட்பட 5 பேரை போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தியதற்காக கைது செய்தனர். அதில், முக்கிய குற்றவாளி தலைமறைவானான். அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்ட விண்ணப்பங்கள், போலி அடையாள அட்டை, வங்கி செக் புத்தகங்கள், மொபைல் போன்கள், ஐக்கிய ஜனதா தள மாவட்ட தலைவரின் சீல், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், இக்கும்பல், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதுடன், அரசின் திட்டப்பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதான இரண்டு பெண்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தலைமறைவான முக்கிய குற்றவாளி, வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் 90 ஆயிரம் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி போலீஸ் ஸ்டேசனில் பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories