பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன்..

Tamil News large 3103354 - 2026

பீகார் 8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலியான போலீஸ் அதிகாரி போலி ஐஏஎஸ் அதிகாரியை ,போலி சிபிஐ அதிகாரியை பார்த்திருக்கிறோம். ஆனால், போலி போலீஸ் ஸ்டேசன் பார்த்திருக்கிறீர்களா? அந்த குறையை போக்கி விட்டார்கள். பீஹார்காரர்கள். அங்கு, 8 மாதமாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீஹாரின் பங்கா மாவட்டத்தில், நகர போலீஸ் ஸ்டேசன் மற்றும் மாவட்ட எஸ்.பி., வீடு அமைந்துள்ள பகுதி அருகே விருந்தினர் இல்லம் ஒன்றில், கும்பல் ஒன்று போலியாக போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்துள்ளனர். இந்த கும்பல், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் அணியும் சீருடை போன்றே உடையணிந்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இதற்காகவே அந்த விருந்தினர் மாளிகையை, போலீஸ் ஸ்டேசன் உட்கட்டமைப்பை போலவே மாற்றி அமைத்துள்ளனர். அந்த கும்பலில் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் போலீஸ் சீருடையில் வந்தவர்களை, நகர போலீஸ் அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது உண்மை வெளிப்பட்டது. இதனையடுத்து 2 பெண் உட்பட 5 பேரை போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தியதற்காக கைது செய்தனர். அதில், முக்கிய குற்றவாளி தலைமறைவானான். அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்ட விண்ணப்பங்கள், போலி அடையாள அட்டை, வங்கி செக் புத்தகங்கள், மொபைல் போன்கள், ஐக்கிய ஜனதா தள மாவட்ட தலைவரின் சீல், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில், இக்கும்பல், போலீஸ் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றியதுடன், அரசின் திட்டப்பணிகள் நடக்கும் இடத்திற்கு சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. கைதான இரண்டு பெண்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தலைமறைவான முக்கிய குற்றவாளி, வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் 90 ஆயிரம் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி போலீஸ் ஸ்டேசனில் பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories