இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.. ‌‌

images 51 3 - 2026

ஜம்மு-காஷ்மீரை ‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என கேரள எம்.எல்.ஏ. பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம், கேரள மாநில தாவனூர் தொகுதி எம்.எல்.ஏ. கேடி ஜலீல். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாவனூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவர் அம்மாநிலத்தில் கடந்த இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் மந்திரியாக இருந்துள்ளார். இதனிடையே, கேடி ஜலீல் கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். தனது காஷ்மீர் பயணம் குறித்து ஜலீல் கடந்த 12-ம் தேதி தனது பேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை ‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ஜலில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் பகுதி ‘அசாத் காஷ்மீர்’ (விடுதலை பெற்ற காஷ்மீர்) என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் அரசின் எந்த கட்டுப்பாட்டிலும் இல்லை.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் அனைத்து பகுதியிலும் இருப்பதால் காஷ்மீர் மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டனர். ராணுவ வாகனங்கள், ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது காஷ்மீர் மக்களின் தினசரி வாழ்க்கையாக மாறிவிட்டது.

காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித அலட்சியம் நிலவுகிறது’ என பதிவிட்டிருந்தார். இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட ஜலீல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அவர் தனது பதிவை திருத்தி எழுதியுள்ளார். அசாத் காஷ்மீர் (விடுதலை பெற்ற காஷ்மீர்) என்பதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என எடிட் செய்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் என்றும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விடுதலை பெற்ற காஷ்மீர் என்றும் பதிவிட்ட எம்.எல்.ஏ. கேடி ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அருண் மோகன் திருவல்லா முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விடுதலை பெற்ற காஷ்மீர் என பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட எம்.எல்.ஏ. கேடி ஜலீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கேடி ஜலீல் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories