உத்தரகாண்டில் தாய், மனைவி,3 மகள்களை கொடூரமாக கொலை செய்தவர் கைது..

உத்தரகாண்டில் ஒரு நபர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் 47 வயது நபர் ஒருவர் தன்னுடைய தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டோராடூன் மாவட்டம் நாககேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து டேராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் கமலேஷ் உபாத்யாய் கூறியதாவது:- நாககேரில் வசிக்கும் மகேஷ் குமார் (வயது 47) தன்னுடைய தாய் பிதான் தேவி (வயது 75), மனைவி நிது தேவி (வயது 36) மற்றும் மூன்று மகள்கள் அபர்ணா, ஸ்வர்ணா மற்றும் அன்னபூர்ணா ஆகியோரை தினசரி பிரார்த்தனை செய்த பின்னர் கொன்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மகேஷ் குமார் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவர் குடும்பத் தேவைகளுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். மகேஷ் குமாரின் மற்றொரு மகள் ஷியாம் பவானி கொலை நடந்த போது தபோவனத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்ததால் உயிர் பிழைத்தார். மேலும், மகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தாயார் மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

835704 arrest33 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories