3 கி.மீ. ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்..

பெங்களூருவில் காரில் வந்த டாக்டர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி,காரிலிருந்து இறங்கி 3 கி.மீ. ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் கோவிந்த் நந்தகுமார் பெங்களூரி

ருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை மருத்துவராகப் பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அவசரமாக அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய தனது காரில் சென்று கொண்டிருந்தார் டாக்டர் கோவிந்த் நந்தகுமார்.

பெங்களூரு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கது. அங்கே சாலையில் கொஞ்ச தூரம் வாகனத்தில் கடக்க வேண்டும் என்றாலும் அதிக நேரம் எடுக்கும். சில வாரங்களாகப் பெய்த கனமழையால் நகரின் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சர்ஜாபூர்-மரதல்லி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார் டாக்டர் நந்தகுமார். தாமதமானால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் நோயாளிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தார். நோயாளியைக் காப்பற்ற விரைவாக ஒரு முடிவை எடுத்தார். அதன்படி, தனது காரை விட்டு இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓடத் தொடங்கினார்.

மூன்று கிலோமீட்டர் தூரத்தை, 45 நிமிடங்களில் ஓடி, மருத்துவமனையை அடைந்தார். சரியான நேரத்தில் அந்த அறுவை சிகிச்சையைச் செய்து, நோயாளியை பாதிப்பில் இருந்து மீட்டார்.

தனது ஓட்டத்தின் ஒரு சிறிய வீடியோ க்ளிப்பை அவர் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து டாக்டர் நந்தகுமார் கூறும்போது, “நான் ஒவ்வொரு நாளும் மத்திய பெங்களூரிலிருந்து பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள சர்ஜாபூர் மணிப்பால் மருத்துவமனைக்குப் பயணம் செய்கிறேன். அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் சென்றதும் அறுவை சிகிச்சையை ஆரம்பிக்க என் குழு தயாராக இருந்தது. அதிக போக்குவரத்தைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கி, யோசிக்காமல் மருத்துவமனையை நோக்கி ஓடினேன். நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்த என் மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தார்கள். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நோயாளி சரியான நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார” என்றார் மகிழ்ச்சியுடன்.

மருத்துவரின் இந்தச் செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Screenshot 2022 09 12 21 16 23 140 org.telegram.messenger - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories