பிரதோஷ பூஜை நடைபெறும் பெருமாள் கோயில்-யோகம் தரும் யோக நரசிம்மர்..

images 68 - 2026

பிரதோஷம் என்றால் சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் வழிபாடு.ஆனால் பிரதோஷம் அபிஷேகம் பூஜை கடைபிடிக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.மதுரை அருகே உள்ள யோக நரசிம்மர் கோயிலில் பிரதோஷ அபிஷேக ஆராதனை பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும்.இன்று புரட்டாசி பிரதோஷ நாளில் யோக நரசிம்மரை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

மதுரையில் அமைந்துள்ளது யானைமலை யோக நரசிம்மர் திருக்கோயில். குடைவறை கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் மிகவும் பெரிய நரசிம்ம பெருமானின் உருவம் உள்ளது.

பெரிய குடைவறை கோயில் என்ற பெருமை உடையது. பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தளம்.

மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் மேற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்

இந்த கோயிலில் குடைவறையாக அமைந்துள்ளதோடு, கருவறைக்கு மேல் மிகவும் உயர்ந்த யானை மலை உள்ளது அதனால் கொடி மரம் வைக்கப்படவில்லை.

திருவிழா மற்றும் விஷேசங்கள் இக் கோயிலில் பிரபலமான ஒன்றாகும்.எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயில் தான்.மாசி மாத பெளர்ணமி அன்று இந்த கோயிலில் அமைந்துள்ள பெரிய தெப்பத்தில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

108 திவ்ய தேசத்தில் ஒன்றான திருமோகூர் காளமேகப் பெருமாள் இங்கு எழுந்தருளி முதலையிடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சிற்பபாக கொண்டாடப்படுகிறது.திருவண்ணாமலைப் போல பெளர்ணமி கிரிவலம் சிறப்பாக நடக்கிறது.

பிரதோஷம் கொண்டாடும் கோயிலில் இந்த பெருமாள் கோயில் மிக முக்கியமான ஸ்தலமாக விளங்குகிறது.

சுவாதி திருமஞ்சனம் மற்றும் பிரதோஷ திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நரசிம்ம பெருமான் பிரதோஷ தினத்தின் 4.30 முதல் 5.30க்குள் அவதரித்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்கு பிரதோஷம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு சனிக்கிழை தினத்தில் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். படிப்பு, தொழில், செல்வத்தை அள்ளித்தருவதால் கோயிலைத் தேடி பல பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த கோயிலின் எதிரே உள்ள சிறிய குன்றில் பாலமுருகன் ஆலையம் உள்ளது. அதன் பின்புறம் பிரத்யங்கரா கோயிலும் உள்ளது.யானைமலையின் வால் பகுதியில் பாண்டுரங்கன் ஆலையம் மிகவும் அமைதி நிலவும் மன நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணிக்கு வந்தால், அங்கிருந்து அரும்பனூர் செல்லும் சிற்றூந்து அடிக்கடி உள்ளது. பெரியார் நிலையத்திலிருந்து யானைமலை நரசிங்கம் கோயில் என அரசு பேருந்தும் இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தும் மாட்டுத்தாவணிக்கு சென்று தான் செல்லும்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
images 70 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories