ஆருத்ரா கோல்டு மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி

mcms 4 - 2026

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்த பணத்தின் மதிப்பு மேலும் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2,425 கோடி அளவு பொதுமக்களிடம் வசூலித்து ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. தமிழகம் முழுவதும் 1.08 லட்சம் பேர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.30 ஆயிரம் வட்டியாக கிடைக்கும் என்ற அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை வசூல் செய்தது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி பல கிளைகளை அமைத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த மே.24-ம் தேதி 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி இது தொடர்பான இயக்குனர்கள், நிர்வாகிகள் என 8 பேர் மீது ஆருத்ரா நிறுவனம் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முதற்கட்ட விசாரணையில் 90 ஆயிரம் பேர் இதில் முதலீடு செய்ததாகவும் ரூ.2,125 கோடி மோசடி செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் அதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் தகவல் அனுப்பியும், பெறவுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் மொத்தமாக 1.08 லட்சம் பேர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக ரூ.2,425 கோடி அளவு முதலீடு செய்துள்ளதாகவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ரூ.100 கோடி அளவிற்கு சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தாலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் ரூ.150 கோடிக்கு மேல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பு ஒப்படைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது  என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories