NIA சோதனையின் போது முன்னதாக தப்பியோடிய PFI தலைவர்கள்: உள்ளூர் போலீஸ் மீது சந்தேகம்!

nia officials

பத்தனம்திட்டா: வியாழக்கிழமை அதிகாலையில் என்ஐஏ சோதனை நடத்திய இடங்களில், என்.ஐ.ஏ., தேடிச் சென்ற பிஎஃப்ஐ தலைவர்கள் இல்லாதது மாநிலத்தில் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல்களை யாரோ PFI தலைவர்களுக்கு கசியவிட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையின் போது, சோதனை குறித்த தகவல்கள் முன்கூட்டியே மாநில காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்படவில்லை; அப்போது மத்திய அரசின் கீழ் உள்ள CRPF உதவியுடன் NIA அந்த சோதனையை நடத்தியது. எனினும், இம்முறை உள்ளூர் போலீஸாருக்கு சோதனை நடத்தப் படும் விஷயத்தைத் தெரியப்படுத்தியதன் பின்னரே சோதனை நடத்தப்பட்டது.

வியாழன் அன்று நடத்தப் பட்ட சோதனையின் போது, பத்தனம்திட்ட மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது, இரண்டு தலைவர்கள் முந்தைய நாளிலிருந்து ஊருக்கு வெளியே சென்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றொருவர் சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடியிருக்கிறார். இது என்.ஐ.ஏ.,க்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து வெளியான தகவல்களின்படி, PFI தலைவர்களுக்கு சோதனை குறித்த ரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து NIA விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபரில், கேரள காவல்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், PFI உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 873 போலீஸ் அதிகாரிகளின் விவரங்களை NIA டிஜிபி.,யிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட அறிக்கைகளை மறுத்து தகவல் வெளியிடப்பட்டது. மேலும் பிஎஃப்ஐ-போலீஸார் இடையிலான உறவு குறித்த என்.ஐ.ஏ.,வின் இந்த அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று, காவல்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும், செப்டம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்பின் போது PFI க்கு உதவியதாக எர்ணாகுளத்தில் ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

செப்டம்பரில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி 15 மாநிலங்களில் PFI இன் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட பல நிர்வாகிகளை NIA கைது செய்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories