NIA சோதனையின் போது முன்னதாக தப்பியோடிய PFI தலைவர்கள்: உள்ளூர் போலீஸ் மீது சந்தேகம்!

nia officials

பத்தனம்திட்டா: வியாழக்கிழமை அதிகாலையில் என்ஐஏ சோதனை நடத்திய இடங்களில், என்.ஐ.ஏ., தேடிச் சென்ற பிஎஃப்ஐ தலைவர்கள் இல்லாதது மாநிலத்தில் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல்களை யாரோ PFI தலைவர்களுக்கு கசியவிட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையின் போது, சோதனை குறித்த தகவல்கள் முன்கூட்டியே மாநில காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்படவில்லை; அப்போது மத்திய அரசின் கீழ் உள்ள CRPF உதவியுடன் NIA அந்த சோதனையை நடத்தியது. எனினும், இம்முறை உள்ளூர் போலீஸாருக்கு சோதனை நடத்தப் படும் விஷயத்தைத் தெரியப்படுத்தியதன் பின்னரே சோதனை நடத்தப்பட்டது.

வியாழன் அன்று நடத்தப் பட்ட சோதனையின் போது, பத்தனம்திட்ட மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது, இரண்டு தலைவர்கள் முந்தைய நாளிலிருந்து ஊருக்கு வெளியே சென்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றொருவர் சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடியிருக்கிறார். இது என்.ஐ.ஏ.,க்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இதையடுத்து வெளியான தகவல்களின்படி, PFI தலைவர்களுக்கு சோதனை குறித்த ரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து NIA விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபரில், கேரள காவல்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், PFI உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 873 போலீஸ் அதிகாரிகளின் விவரங்களை NIA டிஜிபி.,யிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட அறிக்கைகளை மறுத்து தகவல் வெளியிடப்பட்டது. மேலும் பிஎஃப்ஐ-போலீஸார் இடையிலான உறவு குறித்த என்.ஐ.ஏ.,வின் இந்த அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று, காவல்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும், செப்டம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்பின் போது PFI க்கு உதவியதாக எர்ணாகுளத்தில் ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

செப்டம்பரில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி 15 மாநிலங்களில் PFI இன் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட பல நிர்வாகிகளை NIA கைது செய்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories