December 5, 2025, 2:01 PM
26.9 C
Chennai

NIA சோதனையின் போது முன்னதாக தப்பியோடிய PFI தலைவர்கள்: உள்ளூர் போலீஸ் மீது சந்தேகம்!

nia officials

பத்தனம்திட்டா: வியாழக்கிழமை அதிகாலையில் என்ஐஏ சோதனை நடத்திய இடங்களில், என்.ஐ.ஏ., தேடிச் சென்ற பிஎஃப்ஐ தலைவர்கள் இல்லாதது மாநிலத்தில் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இந்த ரெய்டு குறித்த தகவல்களை யாரோ PFI தலைவர்களுக்கு கசியவிட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையின் போது, சோதனை குறித்த தகவல்கள் முன்கூட்டியே மாநில காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்படவில்லை; அப்போது மத்திய அரசின் கீழ் உள்ள CRPF உதவியுடன் NIA அந்த சோதனையை நடத்தியது. எனினும், இம்முறை உள்ளூர் போலீஸாருக்கு சோதனை நடத்தப் படும் விஷயத்தைத் தெரியப்படுத்தியதன் பின்னரே சோதனை நடத்தப்பட்டது.

வியாழன் அன்று நடத்தப் பட்ட சோதனையின் போது, பத்தனம்திட்ட மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது, இரண்டு தலைவர்கள் முந்தைய நாளிலிருந்து ஊருக்கு வெளியே சென்றுள்ளனர், அதே நேரத்தில் மற்றொருவர் சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடியிருக்கிறார். இது என்.ஐ.ஏ.,க்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து வெளியான தகவல்களின்படி, PFI தலைவர்களுக்கு சோதனை குறித்த ரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து NIA விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபரில், கேரள காவல்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், PFI உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 873 போலீஸ் அதிகாரிகளின் விவரங்களை NIA டிஜிபி.,யிடம் ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட அறிக்கைகளை மறுத்து தகவல் வெளியிடப்பட்டது. மேலும் பிஎஃப்ஐ-போலீஸார் இடையிலான உறவு குறித்த என்.ஐ.ஏ.,வின் இந்த அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று, காவல்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும், செப்டம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்பின் போது PFI க்கு உதவியதாக எர்ணாகுளத்தில் ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

செப்டம்பரில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி 15 மாநிலங்களில் PFI இன் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட பல நிர்வாகிகளை NIA கைது செய்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories