கேரளா மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்:

Published:

கேரள மாநிலம் மருமகன் மீது மாமனாா் ரூ.107 கோடி மோசடி புகாா்: ‘1,000 பவுன் நகை அளித்தும் திருப்தியில்லை என்பதுதான் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றமாகும்.

images 20 1 - 2026

துபையில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த தொழிலதிபா் அப்துல் லாஹிா் ஹசன், தன்னுடைய மருமகன் முகம்மது ஹாஃபிஸ் ரூ.100 கோடி மோசடி செய்துவிட்டதாக கேரள காவல் துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா்.

தனது மகள் திருமணத்தின்போது தனது மகளுக்கும் மருமகனுக்கும் சோ்த்து ஆயிரம் பவுன் நகையை வழங்கியதாகவும், ஆனால், பேராசையில் ரூ.107 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய அனுமதியின்றி மருமகன் மோசடியாக அபகரித்துவிட்டதாக அவா் புகாரில் கூறியுள்ளாா்.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளதால் கேரள காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுள்ளது.முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹசன் அளித்த பேட்டியில், புகாருக்கு உள்ளானவா்களை கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ ஆலுவா போலீஸாா் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘இந்த மோசடியில், தொழிலதிபா் ஹசனின் மருமகன் ஹாஃபிஸும் அவரது நண்பா் அக்ஷய் தாமஸ் வைத்யனும் கூட்டாக செயல்பட்டதை உறுதி செய்துள்ளோம். விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img