கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை..

1008505 fdsaf - 2026

ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்தவில்லை என்று அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடைசட்டம் பற்றி கவர்னரிடம் பாஜக கருத்தை வலியுறுத்தியுள்ளோம். சகோதர, சகோதரிகள் ஆன்லைன் ரம்மியில் அடிமையாகி உயிரை மாய்த்துக்கொள்வதை எந்த காரணத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது.

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தார். அந்த அவசர சட்டத்தை இதுவரை தமிழ்நாடு அரசு நடைமுறை படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆன்லைன் தடைசட்டம் காலாவதியாகிவிட்டது என்று தமிழ்நாடு அரசு இன்று கூறுகின்றது.

ஆனால், அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தபிறகு இத்தனை காலமாக தமிழ்நாடு அரசு ஏன் நடைமுறைபடுத்தவில்லை? அவரச சட்டத்திற்கு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அரசாணை கூட தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அப்படி கூறவேண்டுமானால், அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட்ட உடன் கூட தமிழ்நாடு அரசை பொறுத்தவரை நம்மை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் நடந்துகொண்டு தான் இருந்தது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு அதை நடைமுறைபடுத்தவில்லை.

அவரச சட்டம் கொண்டுவரும்போது அது கவர்னரின் பார்வைக்கு வரும்போது அவர் பல கருத்துக்களை பார்க்கிறார். மாநில அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் என்பது சைபர் பகுதி. அது முழுமையாக மத்திய அரசின் மத்திய பட்டியலில் வருகிறது. அதனால், அதற்கு மாநில அரசுக்கு அனுமதி இருக்கா? என்ற கேள்வி வருகிறது. எந்த மாநிலத்திலேயுமே சைபர் பகுதிக்குள் மாநில அரசு செல்லவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசுக்கு முழு சுதந்திரம், அதிகாரம் இருக்கக்கூடிய பகுதிக்குள் மாநில அரசு ஒரு சட்டம் இயற்றியுள்ளனர்.

இதற்கெல்லாம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தெரிகிறது. மாநில அரசும் சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக முடக்கப்படவேண்டும். சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்து இருக்கிறதா? மத்திய-மாநில அரசுக்கும் இடையே வகுத்துள்ள அதிகாரம் சரியாக வகுக்கப்பட்டுள்ளதா? இதை பார்க்கவேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது.

தவறாக இயற்றப்பட்ட சட்டம், சட்டமே இயற்றப்படாததற்கு சமம் என்று கூறுகிறோம். இதனால், மொத்தாம்மொதுவாக கவர்னர் வேலைசெய்யவில்லை,கவர்னர் இதில் கையெழுத்து போடவேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது; என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories