December 6, 2025, 9:31 PM
25.6 C
Chennai

பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..

1012308 chennai 16 5 - 2025

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. கூடுதல் சிறப்பு ரயில் எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் , திருநெல்வேலி -மைசூரு -திருநெல்வேலி இடைய , திருநெல்வேலி -மைசூரு இடையேஇயக்க தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் மற்றும் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்கின்றனர். இதனால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.

பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி தாம்பரம்-நெல்லை (06021), நெல்லை – சென்னை எழும்பூர் (06022), தாம்பரம்-நாகர்கோவில் (06041), நாகர்கோவில் -தாம்பரம் (06042), திருநெல்வேலி (06057/06058) என மொத்தம் தென் மாவட்டங்களுக்கு மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.மறுமார்க்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மேலும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண  ரயில் (06041) ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அதன்பிறகு நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வரும் 11 ஆம் தேதி தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மகரஜோதி விழாவுக்காக எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் , திருநெல்வேலி -மைசூரு -திருநெல்வேலி இடைய , திருநெல்வேலி -மைசூரு இடையே தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழி சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories