ஈ.வே.ரா.வுக்கு யுனெஸ்கோ விருது என்று பாடப்புத்தகத்தில் படிக்க வைத்த பொய்யைப் போல…

vanathi srinivasan - 2026

‘ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய, ‘திராவிட இனவாதம்’ என்ற கட்டுக்கதையே தி.மு.க.,வின் வரலாறு’ என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடந்த, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், ‘கற்பனை கதைகளை, சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நம்பி ஏமாந்து விடக் கூடாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து, வரலாற்று திரிபுதான்’ என பேசியுள்ளார். முதல்வரின் இந்த வரிகளோடு, அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை, அவர் கண்ணாடி முன்பு நின்று, தனக்குத் தானே பேசியிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதைதான் திராவிட இனவாதம். அது தான் தி.மு.க.,வின் அடிப்படை கொள்கை.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக உருவானதுதான், நீதிக் கட்சி. அதுவே, பின்னாளில், தி.க., – தி.மு.க., ஆனது.

தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்த பின், சுதந்திர போராட்டமே நீர்த்துப் போக துவங்கியது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக ஈ.வெ.ரா. அறிவித்தார்.

ஈ.வெ.ரா.,வுக்கு, ‘யுனெஸ்கோ’ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.,வினர். இது தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. என்னதான் தி.மு.க.வினர் மறைத்தாலும், உண்மைதான் இறுதியில் வெல்லும். இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு.க.,வினர் உணர வேண்டும்… என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories