December 6, 2025, 6:03 PM
26.8 C
Chennai

ஈ.வே.ரா.வுக்கு யுனெஸ்கோ விருது என்று பாடப்புத்தகத்தில் படிக்க வைத்த பொய்யைப் போல…

vanathi srinivasan - 2025

‘ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய, ‘திராவிட இனவாதம்’ என்ற கட்டுக்கதையே தி.மு.க.,வின் வரலாறு’ என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடந்த, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், ‘கற்பனை கதைகளை, சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நம்பி ஏமாந்து விடக் கூடாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து, வரலாற்று திரிபுதான்’ என பேசியுள்ளார். முதல்வரின் இந்த வரிகளோடு, அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை, அவர் கண்ணாடி முன்பு நின்று, தனக்குத் தானே பேசியிருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக்கதைதான் திராவிட இனவாதம். அது தான் தி.மு.க.,வின் அடிப்படை கொள்கை.

ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக உருவானதுதான், நீதிக் கட்சி. அதுவே, பின்னாளில், தி.க., – தி.மு.க., ஆனது.

தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்த பின், சுதந்திர போராட்டமே நீர்த்துப் போக துவங்கியது. அதனால்தான், 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை, கருப்பு தினமாக ஈ.வெ.ரா. அறிவித்தார்.

ஈ.வெ.ரா.,வுக்கு, ‘யுனெஸ்கோ’ விருது கிடைத்ததாக, ஒரு கட்டுக்கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்தவர்கள்தான் தி.மு.க.,வினர். இது தான் தி.மு.க.வின் உண்மையான வரலாறு. என்னதான் தி.மு.க.வினர் மறைத்தாலும், உண்மைதான் இறுதியில் வெல்லும். இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை தி.மு.க.,வினர் உணர வேண்டும்… என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories