December 6, 2025, 4:01 AM
24.9 C
Chennai

மின் இணைப்புடன்  ஆதாா்: கால அவகாசம் ஜன31வரை நீட்டிப்பு..

images 24 2 - 2025

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

அதேவேளையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்து, இந்த ஒரு மாத காலத்துக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்துவிட வேண்டாம் என்றும், ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், சுமார் 1.61 கோடி போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்திருக்கும் நிலையில் கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனீட்டாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை இரண்டு வழிகளில் இணைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வழியாகவோ இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 1.61 கோடி மின் இணைப்புகள் மட்டுமே, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளை புத்தாண்டு தினம் என்பதால், சிறப்பு முகாம் நடைபெறாது என்றும், மொத்தமாக இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளா்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.எனவே, இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories