பிபிசி சோதனை- விரிவான விசாரணை வருமான வரித்துறை

944293 1 - 2026

பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலவரத்தில் மோடிக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடைபெற்றன.

இந்திய அரசியலில் முக்கியக் கவனம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இதனை கண்டித்த மத்திய அரசு ஆவணப்படத்திற்கு தடைவிதித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் தடையை மீறி ஆவணப்படத்தை திரையிடவும் செய்தன. 

இந்நிலையில் வருவான வரித்துறையினர் நாட்டில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.  மும்பை, தில்லி அலுவலகங்களில் தொடர்ச்சியாக 2 நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் வரி செலுத்தாமல் இருந்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சோதனையின் போது வரி செலுத்தாமல் இருந்ததற்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கான வரி முறையாக செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் விரிவாக விசாரணைக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories