151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: வெற்றிப் பாதையில் நியூசிலாந்து

Published:

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்னில் ஆட்டம் இழந்தது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பின்ச் 14 ரன்னும், வார்னர் 34 ரன்னும், வாட்சன் 23, க்ளார்க் 12, ஸ்மித் 4, மேக்ஸ்வெல் 1, மார்ஷ் 0 என சொற்ப ரன்களே சேர்த்ததால் ஆஸ்திரேலியா ரன் எடுக்காமல் திணறியது. ஹாதின் மட்டும் 43 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஜான்ஸன் 1, ஸ்டார்ட் 0, குமின்ஸ் 7 ரன் என எடுத்தனர். இறுதியில் 32.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்தது. பின்னர் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலந்து அணி, 9 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்து ஆடி வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img