உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று சிட்னியில் நடைபெற்ற பி பிரிவு லீக் சுற்று 19வது போட்டியில், தென்னாப்பிரிக்க அணி மாபெரும் வெற்றி பெற்று, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 257 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 33.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 257 ரன் வித்தியாசத்தில் மாபெரும் தன்னம்பிக்கை வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி

