WC 2023: இந்திய அணி பெற்ற முதல் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
நான்காம் நாள் – சென்னை
இந்தியா vs ஆஸ்திரேலியா – 08.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன், ஸ்மித் 46, வார்னர் 41, லபுசேன் 27, மிட்சல் ஸ்டார்க் 28, ஜதேஜா 3/28, குல்தீப் 2/42, பும்ரா 2/35) இந்திய அணியிடம் (விராட் கோலி 85, கே.எல். ராகுல், ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க்)

இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு

          பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன் எடுத்தது. ஆறு விக்கட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 11ஆவது ஓவர் முடிவில் 50/1 ரன் எடுத்திருந்தனர். 25ஆவது ஓவர் முடிவில் 110/2; ஆனால் 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டனர்.

          இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பும்ரா 60 பந்துகளில் 40 டாட் பந்துகள் வீசினார்; ஜதேஜா 60இல் 38 டாட் பால்; அஸ்வின் 60இல் 32 டாட் பால்; குல்தீப் 60இல் 31 டாட் பால். ஸ்மித், லபுசேன், அலக்ஸ் கேரி ஆகிய மூவரின் விக்கட்டுகளை ஜதேஜா, தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் எடுத்துவிட்டார்.

டக், டக், டக்

          இந்திய அணி ஆடத் தொடங்கியதும் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது எட்டாவது முறை. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு, ஜிம்பாபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது நடந்தது. எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுக்க அதனை மார்ஷ் பிடிக்கத்தவறினார்.

The Lady luck smiled at Kholi

          அதன் பின்னர் கோலியும் ராகுலும் நிதானமாக ஆடினர். தேவைப்படும்போது ஷாட்டுகள் அடித்து, மீதி நேரத்தில் ஒரு ரன் எடுத்து, தடுத்து ஆடி வெற்றியைக் கிட்டத்தட்ட் ஏட்டியபோது விராட் கோலி, 37.4ஆவது ஓவரில், 85 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுலின் ஸ்கோர் 75. 41.2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து ராகுல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்ட நேர முடிவில் ராகுல் 97 ரன், ஹார்திக் பாண்ட்யா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வெற்றியோடு இந்திய அணி 2 புள்ளிகள், 0.883 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை ஹைதராபாத்தில் நெதர்லாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories