பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயுக்கசிவால் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் உள்ள குளிர்விக்கும் இயந்திரத்தில் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பஞ்சாபின் லூதியானாவில் உள்ள ஒரு உள்ளூர் தொழிற்சாலை யூனிட்டில் இருந்து எரிவாயு கசிந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 4 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயணைப்புப் படையும் ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 50 பேர் கொண்ட குழுவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.




