கொள்ளையடித்தது எப்படி? வீடியோ பதிவிட்ட இரு திருடர்கள் கைது..

images 20 - 2026
#image_title

கொள்ளையடித்தது எப்படி? என வீடியோ பதிவிட்ட இரு திருடர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு திருடர்களை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைதான இரு கொள்ளையர்களும், தாங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த திருடர்கள் திட்டம் தீட்டினர். ஸ்வரூப் நகரை சேர்ந்த பண்டி (23 வயது) மற்றும் ராகுல் (22 வயது) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி வடமேற்கு பகுதிக்கான காவல் துறை துணை ஆணையர் ஜிதேந்திர குமார் மீனா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஸ்வரூப் நகர், முகுந்த்பூர் மற்றும் நகரின் எல்லை பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிப்பது மட்டுமின்றி நகை பறிப்பு போன்ற சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories