சுற்றுலா பயணிகளை கவர்ந்த கோத்தகிரி காய்கறி கண்காட்சி

images 42 - 2026
#image_title

கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 டன் காய்கறிகளாலான டிராகன், முதலை, யானை குடும்பம், சோளம், கம்பு அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஆண்டுதோறும் கோடை சீசனில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என பல்வேறு விதமான கண்காட்சிகள்‌ நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்வாக, கோத்தகிரி நேரு பூங்காவில்‌ 12-வது காய்கறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

images 43 - 2026
#image_title

சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறு தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார்‌ ஒன்றரை டன் அளவில்‌ உருளைக்கிழங்கினால்‌ ஆன கம்பு செடி, குடை மிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாயினால்‌ ஆன மக்காச்சோளம்‌ மெகா உருவங்களாக அமைக்கப்பட்டிருந்தன.

மேலும்‌, காய்கறிகளால் யானை குடும்பம்‌, டிராகன்‌, முதலை, லிங்கம், வரையாடு, ஒட்டகச் சிவிங்கி, இருவாச்சி பறவை, வள்ளுவர் கோட்டம், கரடி போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

986679 - 2026
#image_title

உதகையின்‌ 200-வது ஆண்டை போற்றும்‌ வகையில்‌ ‘ஊட்டி 200’ சின்னம்‌ பல்வேறு காய்கறிகளினால்‌ அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ராணா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி இன்றும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories