சுற்றுலா பயணிகளை கவர்ந்த கோத்தகிரி காய்கறி கண்காட்சி

images 42 - 2026
#image_title

கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. 5 டன் காய்கறிகளாலான டிராகன், முதலை, யானை குடும்பம், சோளம், கம்பு அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஆண்டுதோறும் கோடை சீசனில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என பல்வேறு விதமான கண்காட்சிகள்‌ நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்வாக, கோத்தகிரி நேரு பூங்காவில்‌ 12-வது காய்கறி கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

images 43 - 2026
#image_title

சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறு தானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுமார்‌ ஒன்றரை டன் அளவில்‌ உருளைக்கிழங்கினால்‌ ஆன கம்பு செடி, குடை மிளகாய் மற்றும் பஜ்ஜி மிளகாயினால்‌ ஆன மக்காச்சோளம்‌ மெகா உருவங்களாக அமைக்கப்பட்டிருந்தன.

மேலும்‌, காய்கறிகளால் யானை குடும்பம்‌, டிராகன்‌, முதலை, லிங்கம், வரையாடு, ஒட்டகச் சிவிங்கி, இருவாச்சி பறவை, வள்ளுவர் கோட்டம், கரடி போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

986679 - 2026
#image_title

உதகையின்‌ 200-வது ஆண்டை போற்றும்‌ வகையில்‌ ‘ஊட்டி 200’ சின்னம்‌ பல்வேறு காய்கறிகளினால்‌ அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், எஸ்ஏடிபி திட்ட இயக்குநர் மோனிகா ராணா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புசாமி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி இன்றும் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories