உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – ஆளுநர்

989908 1 - 2026
அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர்

இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

கோவை எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ‘ஒருங்கிணைந்த உலகத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு’ குறித்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு அதன் சிறப்பான பாரம்பரியத்தின் அடிப்படையில் கொள்கை பரிந்துரைகளை வழங்குவதற்கு இதுவொரு சிறப்பான வாய்ப்பாகும். அனைத்து படைப்புகளிலும் இறைவன் ஒருவனே இருப்பதையும், படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட வைக்கும் இடையே வேறுபாடு இல்லை என்பதையும் நமது முனிவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர். இந்தியாவுக்கே உரிய இந்த தனித்துவமான அனுபவத்தையும் மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வையும் ஒட்டுமொத்த உலகின் அனைத்து மனிதர்களுக்கும் நாம் கொண்டுபோய் சேர்ப்பது அவசியம். இன்று உலகமே நம்பிக்கையோடு நம்மை எதிர்நோக்குகிறது.

பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சியை அடையாது. பல நூறாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படுத்தியிருக்கிறது.

2014-ல் 500-க்கும் குறைவான ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இந்தியாவில் இருந்த நிலையில், இன்று அவற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவின் தனிச்சிறப்பான வெற்றிக் கதைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துசெல்லவும் மற்றும் உலகை சிறப்பான வாழ்விடமாக மாற்றவும் இந்நிகழ்ச்சி உதவும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பேசினார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இந்திய பிரதமர் அலுவலகத்தின் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பன்ட், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத்தலைவர் சுவாமி அம்ரிதா ஸ்வரூபானந்தபூரி, ஐ.நா. பொதுச்செயலரின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார், அம்ரிதா விஸ்வ பீடத்தின் துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories