கொடைக்கானலில் கடும் நெரிசல் ..

images 2023 05 20T114602056 - 2026
#image_title

 தலை சுற்றவைக்கும் போக்குவரத்து நெரிசல், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மகிழ்ச்சியைத் தேடி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனஉளைச்சலோடு ஊர் திரும்பும் நிலை உள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு தற்போது தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

பிரையன்ட் பூங்கா, ரோஜா கார்டன், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் சதுக்கம், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆனால், போக்குவரத்து நெரிசல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாதது போன்றவற்றால் சுற்றுலா பயணிகள் நிம்மதியை இழந்து திரும்பிச் செல்கின்றனர்.

தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வாடகையும், உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

சுற்றுலா இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல், கடைகளில் விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கழிப்பறைகள் (இ-டாய்லெட்) அமைக்கப்பட்டிருந்தாலும், அவை சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசு கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள சாலை, பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரும் சாலை என பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

விடுமுறை நாட்களில் கொடைக் கானல் நகருக்குள் நுழையும் முன்பு மலைச் சாலையிலேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தற்போது வரை கூடுதல் போலீஸார் நியமிக்கப்படவில்லை. உடனடியாக கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும்.

கொடைக்கானலில் மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது. அப்போது சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே, அதற்குள்ளாக போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories