கும்பகோணம் அருகே பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

995371 - 2026
#image_title

கும்பகோணம் வட்டம், நாதன்கோயிலிலுள்ள செண்பகவல்லித் தாயார் சமேத ஜெகன்நாதப்பெருமாள் கோயில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமி மடத்தின் நிர்வாகத்தின் கீழுள்ளது. இக்கோயிலில் இன்று ரூ. 1 கோடி மதிப்பில் திருப்பணிகள் முடிந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த 22-ம் தேதி ஸ்ரீ விஷ்வச்சேனா ஆராதனம், அங்குரார்ப்பணமும், மகாசாந்தி ஹோமமும், உற்சவர் திருமஞ்சனமும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மூலஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

பிரதான விழாவான இன்று அதிகாலை சுப்ரபாதம்,புண்யாக வாசனம், யாத்ராதானமும், கடம் புறப்பாடும், இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும், மூலஸ்தான மகா ஸம்ப்ரோஷணமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்த ஜன சேவையும், இரவு ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது. இதில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வானமாமலை திருமட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதே போல் திருவையாறு வட்டம், திங்களூரிலுள்ள ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடைபெற்றது. பிரதான விழாவான மூலவர் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், மூலவருக்கும் மற்றும் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விரு கும்பாபிஷேகங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories