December 6, 2025, 6:05 PM
26.8 C
Chennai

அன்னைத் தமிழைக் காக்க ஆன்மீகத்தை வளர்ப்போம்: விநாயக சதுர்த்தி வாழ்த்து!

hindumunnani - 2025

“அன்னைத் தமிழைக் காக்க; ஆன்மீகத்தை வளர்ப்போம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற அடிப்படையில், ஒரு இந்து மறுமலர்ச்சி விழாவாக வீரத்துறவி ராமகோபாலன் அவர்களால் கடந்த 1983 ம் ஆண்டு துவக்கப் பட்டு கடந்த 40 ஆண்டுகளாக வீதி தோறும் விநாயகரை வைத்து நடைபெற்று வருகின்ற ஒரு சீர்மிகு விழா விநாயகர் சதுர்த்தி விழா.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது மக்கள் மத்தியில் ஜாதி வேறுபாடுகளை, இன வேறுபாடுகளை, மொழி வேறுபாடுகளை, பொருளாதார வேறுபாடுகளை அழித்து அனைவருக்குமான விழாவாக இன்று மாறி உள்ளது, அதற்கு காரணம் இந்து முன்னணி.

இந்துக்களை அவமானப்படுத்துவது, புறம் பேசுவது, இந்து நம்பிக்கையை; இந்து வழிபாட்டு முறைகளை, இந்து மதத்தை, சனாதன தர்மத்தை கேவலப்படுத்துவது போன்றவைகளை முறியடித்து தமிழகம் என்றும் ஆன்மீக பூமி என்பதையும் , தேசிய சிந்தனை கொண்ட மக்கள் வசிக்கும் பூமி என்பதையும் விநாயகர் சதுர்த்தி விழா மெய்ப்பித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை முன்னெடுத்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை விழிப்புணர்வு அடையச் செய்கின்ற பணியை விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி பேர் இயக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு “அன்னைத் தமிழைக் காக்க; ஆன்மீகத்தை வளர்ப்போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி சுமார் இரண்டு லட்சம் விநாயகர்கள் தமிழகம் முழுக்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தமிழை வைத்து பிழைப்பவர்கள் தமிழை வைத்து வயிறு வளர்ப்பவர்கள் யார் யார் என்பதை தோலுரித்துக் காண்பிக்கின்ற பணியை இந்த விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி வெளிக் கொண்டு வர இருக்கிறது.

பக்தி பரவசத்தோடு விநாயகரை வணங்கும் அனைவரும், எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு சிறப்பான வாழ்க்கை அமைய பெற்று வாழ வேண்டும் என்று முழுமுதற் கடவுள் விநாயகரை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

தமிழக மக்கள் அனைவரும் பட்டிதொட்டி எங்கும் நடக்கின்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories