ATS அமைக்கப் படுவதன் சரியான நோக்கத்தை‌ தமிழக அரசு தெளிவு படுத்தவில்லை!

kadeswara subramaniam hindu munnani - 2026

ATS அமைக்கப்பட்டதின் சரியான நோக்கத்தை‌ தமிழக அரசு
தெளிவு படுத்தவில்லை, இருப்பினும்
பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

தென் பாரதத்தில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம், நக்சல் பயங்கரவாதம் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு மிக முக்கியமான காரணம் பயங்கரவாதத்தை தமிழக அரசியல் லாபத்திற்காக மூடி மறைப்பதே.

அதே சமயம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் நாசகார செயலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாடு தான். இது கடந்த நாற்பது ஆண்டுகளாக வெளிப்படையாகவே தெரிய வந்தாலும் அதற்கான சரியான கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பயங்கரவாதின் மீதான முழுமையான பார்வையை காவல்துறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் செயல்பாடு குறித்தான விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதற்கான நிதி சுமார் 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பல கொலை, குண்டுவெடிப்பு வழக்குகள் முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்காததும் தமிழகத்தில் பயங்கரவாம் தலைதூக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எனவே இதற்காக தனியாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது இது போன்ற குறைகளை களைவதுடன் பயங்கரவாதத்தின் செயல்பாடு குறித்து நுண்ணறிவு பிரிவு சேகரிக்கும் செய்திகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

கேரளா, மகாராட்டிரம் உள்பட 4 மாநிலங்களில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. எனவே நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (A.T.S.) அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கிடைக்கும் பயங்கரவாதம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு பயங்கரவாதிகள் எந்த வகையிலும் தப்பிக்காமலும் செயல்படாமலும் முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

தமிழக காவல்துறையை ஒருதலைப்பட்சமாக செயல்பட வைத்து காவல்துறைக்கு அவபெயரை ஏற்படுத்தி வருகிறது ஆளும் திமுக அரசு.

அதுபோல் அரசியல் குறுக்கீடு இல்லாமல் புதிதாக துவக்கியுள்ள இந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவை (ஏ.டி.எஸ்) செயல்பட அனுமதிக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக ஏ.டி.எஸ். பிரிவின் செயல்பாட்டை முடக்காமல் தேச நலனுக்காக, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories