விமானம் இரத்தானதால் பயணிகள் அவதி!
மதுரை: இலங்கையில் இருந்து வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானதால், மதுரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய 189 பயணிகள் தவிப்பு.
மாற்று ஏற்பாடாக நாளை இலங்கையில் இருந்து மதுரை வரும் விமான மூலம் மீண்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையில் இருந்து இலங்கையில் இருந்து மதுரை வரவேண்டிய லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இலங்கையில் இருந்து விமானம் மதுரை வரவில்லை. மேலும், மதுரையில் இருந்து இலங்கை செல்ல காத்திருந்த 189 பயணிகள் மீண்டும் விமானம் மூலம் இலங்கை செல்ல நாளை வருமாறு அறிவுறுத்தி பயணிகளை திருப்பி அனுப்பி உள்ளனர.
திருவில்லிபுத்தூர் மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து…
தீயை அணைக்க முயன்ற காவலாளி மூச்சுத்திணறி பலி…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், அய்யம்பட்டி தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில்லில், இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று அதிகாலை நேரத்தில், மில்லில் அறுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்குவியலில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த பெரியகருப்பன், தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் போது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பெரியகருப்பன் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை சோதனை
திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள, பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில்
2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் போலீசை தாக்கி தப்பி ஓட்டம்:
திண்டுக்கல்: தேனியில் இருந்து, திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையின் போது, தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது, சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார்.
பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார். இதில், நாகலிங்கம் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டன.