கலைமகள் இதழ் சார்பில் டத்தோ சகாதேவன் உள்ளிட்ட மலேசிய அன்பர்களுக்கு பாராட்டு!

kalaimagal function - 2026
#image_title

தமிழக அரசால் நடத்தப் பெற்ற அயலகத் தமிழர்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மலேசிய தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டததோ சகாதேவன் அவர்களையும், உடன்  வந்துள்ள மலேசிய  அன்பர்களையும் வரவேற்று உபசரிக்கும் ஒரு நிகழ்வை கலைமகள் இதழ் மற்றும் தேஜஸ் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தியது. 

டத்தோ சகாதேவன் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் மலேசிய முத்தமிழ்ச் சங்க புரவலராக இருப்பவர். அவருடன் ஒரு குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.  அவர்களது சேவைகளும் பெருமைகளும் தமிழகத்தில் உள்ளோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் வகையிலும், அவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சியை கலைமகள், தேஜஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது. 

ஜன.13 அன்று காலை மயிலாப்பூர் கிளப்பில் வைத்து நடைபெற்ற இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில், மலேசிய விருந்தினர்கள்  கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சென்னையின் பிரபல தொழிலதிபர் இலக்கிய ஆர்வலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் கலந்து கொண்டு அன்பர்களைப் பாராட்டினார். அவர் தமது பாராட்டுரையில், தமது மலேசிய தொழில்துறை அனுபவங்கள்,  சென்னையில் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை  சுவையாகக் கூறினார். 

டத்தோ சகாதேவன் அவர்களுக்கு மலேசிய முத்தமிழ்சங்கம்,  ‘முத்தமிழ்க்காவலர்’  என்ற விருதை அளித்துள்ளது.  நக்கீரர் தமிழ்ச் சங்கம் மனித நேயச் செம்மல் விருதை வழங்கி  கௌரவித்துள்ளது. அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ஆஸ்தான ஓவியர் லேனா,. முத்தமிழ்ச் சங்க தேசிய தலைவர் மனோகரன், துணைத் தலைவர்  எட்வர்ட் ஞானசேகரன், செயலாளர் கரு பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் மதி மரீனாதேவி. செயலவை உறுப்பினர்களான பொன் சாமி , கருணாநிதி, கலைஞர் காந்திதாசன், சங்கிலிமுத்து, திருமதி லூசியா சாந்தி, குமாரி நாகேஸ்வரி உள்ளிட்டவர்களை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  அவர்களது சேவைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில்  அனைவருக்கும் மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரின் பின்னணி, குணநலன்களைச் சொல்லி,  அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவருக்கும் மதிய விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் பவண்டேஷன் அறங்காவலர் மற்றும் கலைமகள் இதழ் பதிப்பாளர் பி.டி.டி. ராஜன் செய்திருந்தார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Topics

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Entertainment News

Popular Categories