கலைமகள் இதழ் சார்பில் டத்தோ சகாதேவன் உள்ளிட்ட மலேசிய அன்பர்களுக்கு பாராட்டு!

kalaimagal function - 2026
#image_title

தமிழக அரசால் நடத்தப் பெற்ற அயலகத் தமிழர்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மலேசிய தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டததோ சகாதேவன் அவர்களையும், உடன்  வந்துள்ள மலேசிய  அன்பர்களையும் வரவேற்று உபசரிக்கும் ஒரு நிகழ்வை கலைமகள் இதழ் மற்றும் தேஜஸ் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தியது. 

டத்தோ சகாதேவன் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் மலேசிய முத்தமிழ்ச் சங்க புரவலராக இருப்பவர். அவருடன் ஒரு குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.  அவர்களது சேவைகளும் பெருமைகளும் தமிழகத்தில் உள்ளோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் வகையிலும், அவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சியை கலைமகள், தேஜஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது. 

ஜன.13 அன்று காலை மயிலாப்பூர் கிளப்பில் வைத்து நடைபெற்ற இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில், மலேசிய விருந்தினர்கள்  கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சென்னையின் பிரபல தொழிலதிபர் இலக்கிய ஆர்வலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் கலந்து கொண்டு அன்பர்களைப் பாராட்டினார். அவர் தமது பாராட்டுரையில், தமது மலேசிய தொழில்துறை அனுபவங்கள்,  சென்னையில் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை  சுவையாகக் கூறினார். 

டத்தோ சகாதேவன் அவர்களுக்கு மலேசிய முத்தமிழ்சங்கம்,  ‘முத்தமிழ்க்காவலர்’  என்ற விருதை அளித்துள்ளது.  நக்கீரர் தமிழ்ச் சங்கம் மனித நேயச் செம்மல் விருதை வழங்கி  கௌரவித்துள்ளது. அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ஆஸ்தான ஓவியர் லேனா,. முத்தமிழ்ச் சங்க தேசிய தலைவர் மனோகரன், துணைத் தலைவர்  எட்வர்ட் ஞானசேகரன், செயலாளர் கரு பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் மதி மரீனாதேவி. செயலவை உறுப்பினர்களான பொன் சாமி , கருணாநிதி, கலைஞர் காந்திதாசன், சங்கிலிமுத்து, திருமதி லூசியா சாந்தி, குமாரி நாகேஸ்வரி உள்ளிட்டவர்களை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  அவர்களது சேவைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில்  அனைவருக்கும் மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரின் பின்னணி, குணநலன்களைச் சொல்லி,  அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவருக்கும் மதிய விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் பவண்டேஷன் அறங்காவலர் மற்றும் கலைமகள் இதழ் பதிப்பாளர் பி.டி.டி. ராஜன் செய்திருந்தார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories