பாஜக., முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாராணசியில் மீண்டும் மோடி போட்டி!

BJP 2022 10 29 - 2026
#image_title

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக., இன்று வெளியிட்டது. தலைநகர் தில்லியில் பாஜக., வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாயின வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அமித் ஷா காந்தி நகரில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 195 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 பேர் என, வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

பாஜக., இன்று வெளியிட்ட 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தில்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி- வாரணாசி, அமித்ஷா- காந்தி நகர், மன்சுக் மாண்டவியா- போர்பந்தர், அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜூஜூ, பன்சுரி ஸ்வராஜ்- புதுடெல்லி, அர்ஜூன் முண்டா- குந்தி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்

அஸ்வினி- காசர்கோடு, கேரளா, நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர், அப்துல் சலாம்- மலப்புரம், கேரளா, மத்திய அமைச்சர் சந்திர சேகர்- திருவனந்தபுரம், கேரளா, மத்திய அமைச்சர் முரளிதரன்- ஆட்டிங்கால், கேரளா ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- குணா, மத்திய பிரதேசம், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்- விதிஷா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இது குறித்து பாஜக,. தேசிய பொது செயலாளர் வினாத் தாவ்டே கூறியபோது, “முதற்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.” என்றார்.

தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை. காரணம், இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையிலும், வரும் மார்ச் 4ம் தேதி பிரதமர் சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாலும், முதற்கட்ட வேட்பளர் பட்டியலில் தமிழகத்தினைச் சேர்ந்த எவரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, கூட்டணி இறுதி செய்யப் பட்டதும், அடுத்தகட்ட பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Topics

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

Entertainment News

Popular Categories