spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

- Advertisement -

தமிழகம், புதுச்சே ரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதற்கட்ட மாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை த் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார் .

இதில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலைக்கு எழுதிய கடித்த தில், ”நீங்கள்தான் என் சொத்து. மதிப்புமிக்க பதவியை உதறிவிட்டு மக்களுக்காக சேவை யாற்ற வந்ததில் மகிழ்ச்சி. கட்டா யம் கோவை மக்கள் வெ ற்றி பெற வை ப்பார்கள் ’’ என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை த் தேர்தல் இந்தியாவில் 7 கட்ட ங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக நாளை (ஏப்ரல் 19) தமிழகம், புதுச்சே ரியில் உள்ள 40 தொகுதிகள் உட்ப ட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட து.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார் .

அந்த வகை யில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மோடி, ‘‘என் அருமையான காரியகர்த்தாவே . ராம நவமி தினத்தில் இந்தக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடை கிறேன். மதிப்புமிக்க பணியை (ஐ.பி. எஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை யாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன்.

தமிழ்நா டு முழவதும் பா.ஜ.க அடிமட்ட கட்டமை ப்பை வலுப்படுத்தி, இளை ஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்ட வற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காக உள்ளீர்கள் . உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும். கோவை மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடை வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்ற வர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதை யும் விட்டு கொடுக்க மாட் டோம்.

இது சாதாரண தேர்தல் அல்ல . இந்தியா முழுவதும் உள்ள குடும்ப ங்கள் , குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வை த்துக் கொ ள்வா ர்கள் . மே லும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்த ப்பட்டுள்ளது.

இன்னும் நிறை ய பணிகள் செ ய்ய வே ண்டி உள்ளது. குறிப்பாக அனை வரும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்ப து இந்த தேர்தல் மூலம் தொடரும். இந்த தேர்தல் என்ப து நம்மை பிரகாசமான எதிர்கால த்துடன் இணைக்கும் பாலமாகும். பா.ஜ.க பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக் கி செ ல்லும். 

அதுமட்டுமின்றி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகை யில் இருக்கும். கடைசி நேரத்தில், நீங்களும் மற்ற நிர்வாகிகளும் தேர்தல் வே லைகளில் பிசியாக இருப்பீர்கள் , இருப்பினும் உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள் ளுங்கள் .

தற்போ து கோடைக்கால ம் தொடங்கிவிட்ட து. இதனால் வெ ப்பம் அதிகரிக்கும். ஆனால் நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல், எனவே வெ யில் தொடங்குவதற்கு முன்பே அனை வரும் வாக்களிக்க வே ண்டும் என்பதை உறுதி செய்யுங்கள் .

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe