January 17, 2025, 6:39 AM
24 C
Chennai

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு: லாரிகள் ஸ்டிரைக்.

#image_title

எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, உசிலம்பட்டி வட்டார அளவிலான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கட்டுமான பணிகளில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள குவாரி மற்றும் கிரஷர்களில் திடீரென தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு யூனிட் எம்.சாண்ட் – 3 ஆயிரத்தில் இருந்தது தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கும், பி.சாண்ட் – 4 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், ஜல்லி – 2200 ல் இருந்து 3000 ரூபாய்க்கும் என தலா ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வைக் கண்டித்து, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் கல்லூரி முன்பு உசிலம்பட்டி வட்டார அளவிலான டிப்பர் லாரி, டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் தொடரும் இந்த வேலை நிறுத்த போராட்டம் 06 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறும் என, சுமார் 60க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்: அர்ஜூன் சம்பத் கோரிக்கை

மதுரை தேனி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் கிராமப்புற பகுதி என்பதால், விலை உயர்வு காரணமாக வீடுகளின் கட்டுமான பணி செய்ய முடியாத அளவிற்கு ஒரு யூனிடிற்கு தலா ஆயிரம் ரூபாய் வரை அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!