December 5, 2025, 10:47 AM
26.3 C
Chennai

ஆக்கிரமிப்பாளருக்கே கோயில் சொத்துகள்: தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு கண்டனம்!

radhakrishnan thiuthondar sabai - 2025

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் செல்லும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் செல்லும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது என்றார் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை காலை சுவாமி வழிபட வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை காப்பாற்ற சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் உயர்நீதிமன்றத்தை நாடி தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசாங்கமும், அதிகாரிகளும் கோயில் சொத்துக்களை பாதுகாக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஆளும் அரசோ, அமைச்சர்களோ, அரசின் பின்புலம் கொண்டவர்களோ, பணபலம் கொண்டவர்களோ அரசின் விதிமுறைகளுக்கு எதிராக, தவறாக வழிநடத்தினாலும் கூட சட்டத்தை சீர்தூக்கி ஆராய்ந்து அதை தடுக்கும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உண்டு. ஆனால் தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதைபோல ஒரு சட்ட விரோத பெருந்துயர் திருக்கோயில் சொத்துக்களுக்கு விளைந்துள்ளது.

திருக்கோயில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வதில் இருந்து தடைசெய்வதை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இதுவரை சொத்துக்கள் பாராதீணம் செய்வதை தடுக்கப்பட பூஜ்ய மதிப்பில் பத்திரப்பதிவு நடைமுறை உள்ளது. ஆனால் கடந்த 30}ம்தேதி அரசு பிறப்பித்த சட்ட விரோத அரசாணையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மாதிரியான அரசாணை பிறப்பிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது. சட்ப்படியும் இந்த அரசாணை நிலைக்காது. இதனை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக அரசாணையை ரத்து செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகமதியர் காலத்திற்கு பின்பும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட சில கோயில் இடங்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் இப்போது திருக்கோயில் சொத்துக்களுக்கு பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட ஊழியத்தின் பேரில் கோயில் விழாக்கள் கொண்டாட, கோயில் பராமரிக்க முன்னோர்களால் எழுதி வைக்கப்பட்ட நிலறங்களை எந்தநோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்டதோ, அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும்.

அறநிலையத்துறை சட்டப்பிரிவு 109}ன்கீழ் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க எந்த கால வரம்பும் கிடையாது. அரசுத்தான் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். பன்முக ஆளுமைத்திறன் கொண்ட கலைஞரின் ஆட்சியில் கூட பல்வேறு கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் முறைப்படுத்தப்பட்டு அவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு கோயில்களுக்குரிய வருவாய் கிடைத்தது.

ஆனால் இன்று அந்த வாய்ப்பு கூட பறிபோயிடும் நிலை உள்ளது. ஆக மொத்தம் திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசின் பின்னணியில் இருந்து மறைமுகமாக இயக்குகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories