
வதந்தியை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என இன்று
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக கூட்டணி பலமாக உள்ளதால் அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என்ற வதந்தி தமிழகத்தில் பரவுகிறது. அதை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற கோசத்துடன் 2026ஐ சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை இன்று(அக்டோபர் 12) மதுரையில் தொடங்குகிறார். இதற்காக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாநில துணை தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுவாமி தரிசனத்திற்கு பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஆண்டாள் சந்நிதியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வேண்டினேன். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக சார்பில் நான் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பேரணி மதுரையில் தொடங்கினாலும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து முறையாக இங்கிருந்தே எனது பயணத்தை தொடங்குகிறேன். கண்டிப்பாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
அதிமுக மீது டிடிவி தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. என் மீதும் வெறுப்பாக தான் பேசினார்கள். இப்போது அமைதியாக உள்ளனர். அவர்களது சொந்த பிரச்சனைக்காக கட்சிகளைப் பற்றி தவறாக பேசுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும். திமுக கூட்டணி பலமாக உள்ளத அவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள் என்கிற வதந்தி தமிழகத்தில் பரவி வருகிறது. அதை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும், என்றார். உடன் பாஜக மாநில துணைத்தலைவர் ராஜகோபால் Ex எம்எல்ஏ. பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்





