December 5, 2025, 9:57 AM
26.3 C
Chennai

கந்த சஷ்டி விழா முருகன் திருக்கல்யாண உத்ஸவம்!

murugan kayanam in chozhavanthan1 - 2025

சோழவந்தான் தென்கரை கோயிலில் திருக்கல்யாணம்:

சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து, முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகம் நடைபெற்றது. தொடர்ந்து,
ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை மாற்றுதல் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டியாளர்கள் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், திருவேடகம் ஏலவார்குழலி உடனுறை ஏடகநாத சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சண்முகருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று பாவாடை நெய் வைத்தியம் முடிந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணமும் இரவு சுவாமி திருவிதி உலாவும் நடைபெற்றது திருவேடகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.


உசிலம்பட்டியில் திருக்கல்யாணம்!

usilampatti murugan thirukalyanam - 2025

உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண வைபோகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சிலையாக காட்சி தரும் திருமுருகன் சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் யாக சாலை பூஜைகள் செய்து பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் திருமண வைபோகம் செய்து வைத்தனர்.
மாங்கல்யம் சூட்டப்பட்டு, மாலைகளும் மாற்றப்பட்டது, தொடர்ந்து ,
தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த திருமண வைபோகத்தில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருமுருகன், வள்ளி, தெய்வாணை திருமணத்தை கண்டு ரசித்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அன்னதானமும் வழங்கப்பட்டது.


வில்லாபுரத்தில் சஷ்டி திருக்கல்யாணம்:

murugan thirukalyanam in madurai temples1 - 2025

மதுரை, வில்லாபுரம் சங்கவிநாயகர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது .

மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கவிநாயகர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும்நிர்வாகிகள் செந்தில்குமார் , கருணாநிதி, சந்திரசேகர், அனுசியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . உற்சவர் முருகன் வள்ளி தெய்வானைக்கு 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகர்கள் முருகன் மற்றும் மணமகளாக தேவசேனா இருந்து திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்தபின் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories