December 19, 2025, 4:42 PM
28.5 C
Chennai

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

poornachandran suicidal for thiruparankundram - 2025

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இந்துக்கள் மனது புண்படும்படி நடந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
 
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் விரக்தியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டிலும் மனம் வேதனையடைந்த மதுரையைச் சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து மரணம் அடைந்துள்ளார்.
 
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக பழமையான வழக்கம் மாற்றப்பட்டு மோட்க்ஷ தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
 
இதன் அடிப்படையில் பழங்காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அது இந்துக்களின் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை மாற்றக்கூடாது என்றும், அது முருகப்பெருமானுக்கு சொந்தமான இடம் என்றும் அதில் தீபமேற்றி அதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
 
நீதிமன்ற தீர்ப்பில் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நூறு வருடங்களாக ஏற்றப்படாமல் இருந்த கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும் என்ற எதிர்ப்பார்ப்போடு மகிழ்ச்சியிலும் இருந்தார்கள்.
 
ஆனால் தமிழக திமுக அரசு இந்து விரோத மனப்பான்மையுடன் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றவில்லை. மனுதாரர்கள் மத்திய அரசு பாதுகாப்பு படையுடன் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரும் தீபம் ஏற்ற சென்ற மனுதாரர்களையும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது.
 
இந்த செயலால் தமிழகத்தில் முருகன் மீது அளப்பரிய பக்தியை கொண்ட மக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
 
இது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் அரசு தரப்பிலும் இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை தரப்பிலும் இந்து விரோத மனப்பான்மையில் தன் வாதத்தை எடுத்து வைத்தார்கள்.
 
அது தீபத்தூண் அல்ல சர்வே கல் என்றும், அது தர்காவுக்கு சொந்தமானது என்றும் பல்வேறு வகையான இந்து விரோத இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலான வாதங்களை முன் வைத்தனர்.
 
இதனால் முருக பக்தர்கள் பலர் மிகுந்த மன வேதனையிலும் விரக்தியிலும் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில் இன்று மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றாமல் தவறான முடிவை எடுத்து இந்துக்களுக்கு விரோதமாக தீபம் ஏற்றவில்லை என்ற மன வேதனையிலும், மன விரக்தியிலும் அடுத்த வருடம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்துள்ளார்.
 
அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் பக்தியையும் காப்பாற்றி அவர்களுக்கான உரிமையை பெற்று தர வேண்டிய அரசே, இந்து மதத்திற்கு எதிராக இருந்து இந்துக்களின் உரிமைக்கு எதிராகவும் இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவது என்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும்.
 
இவ்வாறான இந்த செயலால் மனம் வேதனை அடைந்து தன்னைத்தானே தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரன் அவர்களின் இறப்பிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 
ஆன்மீக பூமியான தமிழகத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு இந்து தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டு அழித்துக் கொள்ளும் நிலையில் தமிழகம் இருக்கிறது.
 
இந்துக்களுக்கு துரோகம் விளைவித்து அதன் காரணமாக மன வேதனையிலும் மனவிரக்தியிலும் இறந்த மதுரையைச் சார்ந்த பூர்ண சந்திரன் இறப்புக்கு நீதி வழங்கும் வகையில் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது…

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்றம் உத்திரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் முஸ்டாலின் அரசை கண்டித்து தீக்குளித்து இன்னுயிர் நீத்த பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்டு நெல்லைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு #கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமையில் 21/12/2025 ஞாயிறு காலை 10 மணிக்கு நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, நெல்லை மாநகர் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

2025ன் கடைசி பிரதோஷம்; கரூர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை இந்த...

Entertainment News

Popular Categories