
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்க முற்பட்டனர். ஆனால் பட்டும் படாமலும் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.
அப்போது அவர், என்னுடைய ஒற்றைக் கோரிக்கை எதுவென்றால், பிரிந்திருக்கும் அதிமுக.,வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்! அதுவே எங்கள் கோரிக்கை என்றார்.
அப்போது செய்தியாளர்கள், “மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர். அதற்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “யாராவது உங்களிடம் கூட்டணி குறித்துப் பேசினார்களா?” என்று கேட்டபோது, “ கேள்விக்கு, “டி.டி.வி. உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை” என்று சொல்லி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் காரில் ஏறிச் சென்றார்.




