சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

Published:

சாத்தூரில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த +2 மாணவர்கள் 3 பேர் ஆம்னி பேருந்து மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி 3 பள்ளி மாணவர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பேருந்து மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் இரத்த வெள்ளத்தில் 3 மானவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் சிவகாசி பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் கோகுல் (17), சிவகாசி டவுன் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பிரசன்னா (17), சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை செந்தில்குமார் என்பவரது மகன் யுவராஜ் (17) என்பதும் அவர்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து என்றும் அதனை ஓட்டிய ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் (26) என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் சாத்தூர் தாலுகா போலீசார்
ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img