சிறந்த விஞ்ஞானியாக நெல்லைக்காரர்

Published:

சிறந்த விஞ்ஞானி விருது
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர் கீழப்பாவூரில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை தமிழ்வழியிலும்,  பின்பு  பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்துள்ளார். தனது பி.யூ.சி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியிலும், பி.இ படிப்பை மதுரை தியாகராஜர் எஞ்சீனியரிங் கல்லூரியிலும், எம்.டெக் படிப்பை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி-யிலும் எம்.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலை கழகத்திலும் படித்து முடித்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனதத்தில் (D.R.D.O)  எலக்ட்ரானிக்ஸ் ராடார் மேம்பாட்டு ஆராய்ச்சி ((L.R.D.E) ) அமைப்பில் மூத்தவிஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 1987-ல் விஞ்ஞானி-“பி”(B)யாக பணியை துவக்கிய இவர் இப்போது விஞ்ஞானி”ஜி”(G) நிலைக்கு உயர்ந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்திய அரசால் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி(Scientist of the Year-2014)  என்ற விருதினை மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர்பாரிக்கரிடம் இருந்து பெற்றுள்ளார்
ஞானமிக்கேல்பிரகாசம் National Science Award- 2003. Agni Award for self Reliance- 2007   உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். ராடார்ஆராய்ச்சித்துறையில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல் “SystemGenerator” என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவரது மனைவி செல்வி பெங்களூரில் ஸ்டேட்பாங்ஆப் இந்தியாவிலும், மகன் ரூபஸ்மிக்கேல் ஆப்பிள் நிறுவனத்திலும், மற்றொறு மகன் அனூஸ் இன்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறன்றனர். தமிழ்வழியில் கல்வி கற்ற இந்த சாதனை தமிழனை பாரட்டுவோம்

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img