விஷ்ணு பிரியா தற்கொலை: தலைமறைவாக உள்ள யுவராஜ் முக்கிய ஆடியோ தகவல்

Published:

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா,  வற்புறுத்தலின் பேரில்தான்  தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். இவர், பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலைப் பேரவை நிறுவனர்.

யுவராஜ் சற்று முன்னர் வெளியிட்ட ஆடியோவில் கொடுத்துள்ள அறிவிப்பு:
நாளை 27ந்தேதி காலை 11மணிக்கு விஷ்ணுபிரியா வற்புற்த்தலின் பேரில்தான் தற்கொலை செய்து கொள்ள தள்ளப்பட்டார் எனபதற்கான ஆதாரத்தினை ஊடகங்களுக்கு நான் அனுப்பி வைக்க உள்ளேன். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கையினை முதல்வர் எடுப்பார் என நான் நம்புகிறேன். தவறு செய்பவர்கள் குறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தால், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பது மக்களின் எண்ணம்…. என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்ட ஆடியோ தகவல்:

 

 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img