அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா, வற்புறுத்தலின் பேரில்தான் தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். இவர், பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலைப் பேரவை நிறுவனர்.
யுவராஜ் சற்று முன்னர் வெளியிட்ட ஆடியோவில் கொடுத்துள்ள அறிவிப்பு:
நாளை 27ந்தேதி காலை 11மணிக்கு விஷ்ணுபிரியா வற்புற்த்தலின் பேரில்தான் தற்கொலை செய்து கொள்ள தள்ளப்பட்டார் எனபதற்கான ஆதாரத்தினை ஊடகங்களுக்கு நான் அனுப்பி வைக்க உள்ளேன். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கையினை முதல்வர் எடுப்பார் என நான் நம்புகிறேன். தவறு செய்பவர்கள் குறித்து தகுந்த ஆதாரங்கள் இருந்தால், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பது மக்களின் எண்ணம்…. என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்ட ஆடியோ தகவல்:


