படகில் குண்டு வெடிப்பு: மாலத்தீவு அதிபர் உயிர்தப்பினார்

Published:

மாலி:

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பயணித்த படகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டு விட்டு மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், தனது மனைவி பாதிமாத் இப்ராகிம்முடன் திரும்பினார். அவர் கடலில் ஸ்பீடு படகில் வந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் அப்துல்லா யாமீன் மற்றும் அவருடைய மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் காயம் இல்லாமல் உயிர் தப்பினார் என்றும் அவருடைய மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் படகில் குண்டு வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவரவில்லை.

தில்லியில் உள்ள இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமத் முகமது இது குறித்துத் தெரிவித்த போது, “அதிபர் அப்துல்லா யாமீன், அவருடைய மனைவியுடன் மாலி விமான நிலையத்தில் இருந்து சென்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவருடைய மனைவி காயம் அடைந்துள்ளார். அவர் மாலியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்று கூறினார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதை அடுத்து அதிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ் இயந்திரப் படகுக்கு மாற்றப்பட்டு மாலிக்கு அழைத்து வரப்பட்டனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img