இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தியாவின் பல்நோக்கு செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டை சுமந்து சென்று விண்ணில் வெற்றிகரமாக நிறுத்தியது பிஎஸ்எல்வி.
வானிலை மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பான முன்னேற்றத்துக்கு பயன்படும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் மையத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் அனுப்பிய உலக நாடுகளில் இந்தியாவும் 4வதாக இடம் பிடித்துள்ளது.
45 மீ உயரமும் 320 டன் எடையும் கொண்டது பிஎஸ்எல்வி-30 ராக்கெட். இந்த ராக்கெட், 1513 கிலோ எடை கொண்ட இந்தியாவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளுடன், அமெரிக்க நிறுவன செயற்கைக் கோள் உள்ளிட்ட மேலும் ஆறு வர்த்தக ரீதியிலான செயற்கைக் கோளுடன் வெற்றிகரமாகப் பாய்ந்து, குறிப்பிட்ட இலக்கில் நிலைநிறுத்தியது.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில்,
Well done @isro. This is one more grand accomplishment for Indian science & our scientists. https://t.co/t0skgNpH9j
— Narendra Modi (@narendramodi) September 28, 2015
– என்று குறிப்பிட்டுள்ளார்


