தபால் குண்டுகள் வெடித்தில் உடல் சிதறி ஆறு பேர் சீனாவில் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ஷாப்பிங் மால், சிறைச்சாலை, அரசு அலுவலகம், சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை, போக்குவரத்து நிலையம், காய்கறிச் சந்தை, நோய் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களில், இக்குண்டுகள் வெடித்தன.
சீனாவில், 15 இடங்களுக்கு, அனுப்பப்பட்ட தபால்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால், பதற்றம் நிலவியது.இதில், ஆறு பேர் சம்பவ இடங்களில், உடல் சிதறி பலியாயினர்.
மேலும், ஏராளமானோர் காயங்களுடன் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தபால் குண்டுகள் வெடித்ததால், ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள், இணையதளங்களில் வெளியாகின.
குண்டுகள் வெடித்த இடங்களில், மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


