சென்னை:
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வடசென்னை அனல் மின்நிலையம் அலகு 1-ல் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்தவர் பாபு. இவர் கடந்த 28ம் தேதி மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த பாபுவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.


