டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. அந்த வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஜாதி, கவுரவக் கொலைகளுக்கு எதிரான மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா வரவேற்றார். மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:

கடலூரைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பு வழக்கை மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும். இந்தப் பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்புவோம். நாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மன்மோகன் சிங்கை சோனியா காந்தி இயக்குவதாக மோடி குற்றம் சாட்டினார். இப்போது மோடியை ஆர்எஸ்எஸ் நேரடியாகவே இயக்கு கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர் கள் தங்களது செயல்திட்ட அறிக் கையை ஆர்எஸ்எஸ் தலைமை யிடம் அளிக்க வேண்டியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டை மறு ஆய்வு செய்ய வேண் டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்து கிறது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் உறுதியாக உள்ளது. மோடி அரசுப் பதவியில் இருப் பதைப் பயன்படுத்தி சாதிய சக்திகள் தங்களை வலுப்படுத்தி வருகின்றன. கடந்த 14 மாதத் தில் 25 நாடுகளுக்கு மோடி சுற்றுப் பயணம் செய்துள்ளார். இங்கே விவசாயிகள் தற்கொலை செய் வதைப் பற்றி அவர் கவலைப்பட வில்லை.

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ் வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங் குவோம் என்று கூறிய மோடி யையே தற்போது வெளிநாட்டில் இருந்து மீட்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு அளவுக் கான சொத்து 100 பேரிடம் மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில், 90 சதவீத இந்திய குடும்பத்தினரின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
சமூக நீதிக்காகவும், பொரு ளாதார நீதிக்காகவும் நாம் இணைந்து போராடினால்தான் சாதிய கொடுமைகளை ஒழிக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான மதிப்பு இருக்கும் நிலையை அடைய நாம் அனை வரும் இணைந்து போராட வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories